தமிழகத்தில் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு; நாடு முழுவதும் பரவலும் அதிகரிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, December 22, 2021

தமிழகத்தில் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு; நாடு முழுவதும் பரவலும் அதிகரிப்பு

புதிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இந்தியா முழுவதும் இந்த வைராசல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் பாசிட்டிவ் ரிப்போர்ட் வெளியாகி இருக்கிறது.

2 வது ஆண்டாக கோவிட் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது ஒமைக்ரான் என்ற புதிய கோவிட் உலகம் முழுவதும் பரவ துவங்கி இருக்கிறது. இது மிக மோசமானதாக இருக்கும் என உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது. இந்தியாவில் இன்று 7,495 பேருக்கு கோவிட் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒமைக்ரான் வைரசால் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 104 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். தமிழகத்தில் 33 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த வைரஸ் பவல் குறித்து தலைமை செயலர் இறையன்பு இன்று மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதார துறை உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot