கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி பெறத் தகுதியில்லாதோர் விவரம் வெளியீடு - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, December 11, 2021

கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி பெறத் தகுதியில்லாதோர் விவரம் வெளியீடு

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையில், தகுதி பெறாத இனங்களுக்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை பெறப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு தோ்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் நிலையில், நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்த கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பொது நகைக்கடன் தள்ளுபடி பெறுவதற்கான தகுதிகள் குறித்தும், தகுதிபெறாதோர் குறித்தும் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இது தொடர்பான அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளில் ஒட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் நேரடியாக கூட்டுறவு வங்கிகளுக்குச் சென்றும் இது பற்றி அறிந்து கொள்ளலாம்.

பொது நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிபெறாத னங்களுக்கான நிபந்தனைகள்..

தகுதிபெறாத இனங்கள் குறித்த பட்டியல் இதோ..

1. 5 பவுனுக்கு மிகாமல் நகையீட்டின் பேரில் பொது நகைக்கடன் பெற்று, 31.03.2021 அன்று கடன் நிலுவையாக இருந்து, அரசாணை வெளியிடப்படும் நாள் அன்றோ, அல்லது அதற்கு முன்னரோ அக்கடன் தொகை முழுவதும் திரும்பச் செலுத்தப்பட்ட கடன்கள்.

2. ஆதார் எண்ணின் அடிப்படையில் ஒரே நபர், தமிழகத்தில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகைக்கடன்கள் மூடுலம் 5 பவுனுக்கு மேற்பட்ட மொத்த எடை 40 கிராமுக்கு மேற்பட்டு - நகை அடமானம் வைத்து பெற்ற அனைத்து நகைக்கடன்கள் மற்றும் அத்தகைய நபர்களது குடும்ப உறுப்பினர்கள் பெற்ற கடன்கள்.

3. குடும்ப அட்டை எண்ணின் அடிப்படையில் ஒரே நபரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களோ தமிழ்நாட்டில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் 5 பவுனுக்கும் அதிகமாக தங்க நகை அடமானம் வைத்து பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்கள்.

4. 31.03.2021க்குப் பிறகு வழங்கப்பட்ட நகைக்கடன்கள்.

5. 2021ஆம் ஆண்டு பயிர்க்டன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பயன்பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையின்படி இடம்பெற்றுள்ள அவர்தம் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்கள்.

6. எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெற்ற நகைக்கடன்கள். 7. வரியோரிலும் வறியோருக்கு வழங்கப்படும் ஏஏஒ (அந்தியோதயா அன்ன யோஜனா) குடும்ப அட்டைததாரர்கள் ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேட்றபட்ட கூட்டுறவு நிறுவனங்களில், ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கும் கூடுதலாக நகைகளை ஈடாக வைத்து கடன்பெற்றவர்கள்.

8. அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், அரசுத் துறை நிறுவனங்களில் தற்காலிக அடிப்படையிலோ அல்லது காலமுறை அடிப்படையிலோ அல்லது தொகுப்பூதிய அடிப்படையிலோ பணியாற்றுபவர்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்கள் (குடும்ப ஓய்வூதியதாரர்கள் தவிர) ஆகியோர் பெற்ற நகைக்கடன்கள் (அரசு ஊழியர்கள் என்பவர்கள் மத்திய, மாநில, அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களைக் குறிக்கும். அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் இவ்வரையறை பொருந்தும்)

9. கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்கள்.

10. கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகக் குழுவினர், அவர்தம் குடும்பத்தினர் பெற்ற நகைக்கடன்கள்.

11. சங்க அளவில் நகைக்கடன் வழங்க நிதியாதாரம் ஏதுமில்லாமலும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து அனுமதிக்கப்பட்ட காசுக்கடனிலிருந்து தொகை ஏதும் பெறப்படாமலும், நகையை மட்டும் பெற்றுக்கொண்டு பணம் ஏதும் பட்டுவாடா பெய்யாமலும், உறுப்பினர்களும் சேமிப்புக்கணக்கில் வரவ வைத்து பணப்பட்டுவாடா செய்யாமல் வழங்கப்பட்ட நகைக்கடன்கள் (ஏட்டளவில் நகைகடன் பட்டுவாடா).

12. சங்க அளவில் நகைக்கடன் வழங்க நிதியாதாரம் ஏதுமில்லாமலும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து அனுமதிக்கப்பட்ட காசுக்கடனிலிருந்து தொகை ஏதும் பெறப்படாமலும், நகையை மட்டும் பெற்றுக் கொண்டு பணம் ஏதும் பட்டுவாடா செய்யாமலும் நகைகடன் அனுமதிக்கப்பட்டு, அந்தத் தொகை சங்கத்தில் இட்டுவைப்புகளாக (டெபாசிட்டுகள்) முதலீடு செய்யப்பட்ட நகைக்கடன்கள் (ஏட்டளவில் நகைக்கடன் பட்டுவாடா)

13. நகைக் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் எடை, தரம், தூய்மைக்குறைவு அல்லது தரம் குறைவான நகைகளுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு அந்நகைகளுக்கு வழங்கப்பட வேண்டிய கடன் தொகைக்கும், அதிகமாக வழங்கப்பட்ட தொகையை மட்டும் தள்ளுபடியிலிருந்து நீக்க வேண்டும். 14. கடன் வழங்கப்பட்ட தேதியில் ஒரு கிராமுக்கான சந்தை மதிப்பில் அனுமதிக்கப்பட வேண்டிய 75 சதவிகித தொகைக்கு உள்பட்ட நகைக்கடன் தொகை மட்டுமே தள்ளுபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இரப்பின் சரக அளவிலான சிறப்பு குறைதீர்வுக்குழு அதனை ஆராய்ந்து மாவட்டக் குழுவிற்கு பரிந்துரை செய்யும். அதன் அடிப்படையில் மாவட்டக் குழு இது குறித்து இறுதி முடிவு எடுக்கலாம்.

15. நகைகளே இல்லாமல் ஏட்டளவில் வழங்கப்பட்ட நகைக்கடன்கள்.

16. போலி நகைகளுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன்கள்.

17. சுயவிருபப்த்தின் பேரில் நகைக்கடன் தள்ளுபடிபெற விருப்பம் இல்லாதவர்கள் (படிவம் 3-இல் உறுதிமொழிச் சான்று பெறவேண்டும்.)

18. தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை இல்லாமல் பிற மாநலிங்களால் (புதுச்சேரி, யூனியன் பிரதேசம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட) வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் இருப்பன் அவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.

19. ஆதார் அட்டையில் தமிழ்நாடு முகவரி இல்லாமல் பிற மாநிலங்களின் (புதுச்சேரி, யூனியன் பிரதேசம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட) முகவரி கொணட ஆதார் அட்டைகள் இருப்பின் அவர்களுக்கு தள்ளுபடி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot