மாணவர்களுக்கு மே 13 வரை வேலை நாள்: மறுபரிசீலனை செய்ய பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, March 5, 2022

மாணவர்களுக்கு மே 13 வரை வேலை நாள்: மறுபரிசீலனை செய்ய பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே 13 வரை வேலை நாள் என்பதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி வரை வேலை நாள் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

கோடைகாலம் அனைத்து சனிக்கிழமைகளில் வேலைநாள் , எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்கிற நிலையில் மே மாதம் 13-ஆம் தேதி வரை பள்ளிகளை நடத்துவது என்பது தேவையற்றது. மத்திய அரசு பள்ளிகள் அனைத்தும் தற்போது தேர்வுகளை நடத்த துவங்கி உள்ளன.ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளும் முடிவு பெறு ம்.

அதே நடைமுறையை பின்பற்றி தமிழக அரசு இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் அனைத்து தேர்வுகளை முடிதது விடுமுறை அளிக்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது

Dr.P. பேட்ரிக் ரெய்மாண்ட்

பொதுச்செயலாளர்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot