அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளை மூட இம்மாநில முதல்வர் அதிரடி உத்தரவு - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, February 8, 2022

அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளை மூட இம்மாநில முதல்வர் அதிரடி உத்தரவு

கர்நாடக மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மூட உத்தரவிட்டு அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

மாணவர்கள் ஹிஜாப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைதி, சமய நல்லிணக்கத்தை பேண நடவடிக்கை

இதையும் படிக்க | தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை ?

கர்நாடகா : ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றி காவிக் கொடியேற்றிய மாணவர்கள்

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசியக் கொடிக்கு பதிலாக, காவி கொடி மாற்றப்பட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கதாகும்.

- கர்நாடக கல்வித்துறை அமைச்சர்

கர்நாடகாவில் முஸ்லிம் மாணவியர், கல்லுாரிக்கு 'பர்தா' அணிந்து வரும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனையடுத்து அடுத்த 3 நாட்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்க முதல்வர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை காக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot