போக்சோவில் ஆசிரியை கைது - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, December 29, 2021

போக்சோவில் ஆசிரியை கைது

போக்சோவில் ஆசிரியை கைது

பெரம்பலுார் : பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு துாண்டிய ஆசிரியை, 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அரியலுார் மாவட்டம் அம்பாபூர் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி மகள் ராசாத்தி, 24. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரியலுாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்தார். அங்கு பிளஸ் 2 படித்த, 17 வயது மாணவரை காதலித்தார். இரு வீட்டாரும் இதை எதிர்த்தனர். காதல் ஜோடி அக்., 22ல் பெரம்பலுார் மாவட்டம் மூங்கில்பாடியில் உள்ள மாணவனின் பாட்டி வீட்டுக்கு வந்தனர்.

அங்கு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இருவரும் பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். மாணவனின் பெற்றோர் கொடுத்த புகார் பேரில், குன்னம் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, ராசாத்தியை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot