கட்டடக் கலை உதவியாளர், புள்ளியியல் துறை பணிகளுக்கு ஜன.8,9-இல் எழுத்துத் தேர்வு - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, December 30, 2021

கட்டடக் கலை உதவியாளர், புள்ளியியல் துறை பணிகளுக்கு ஜன.8,9-இல் எழுத்துத் தேர்வு

கட்டடக் கலை உதவியாளர், புள்ளியியல் துறை பணிகளுக்கு ஜன.8,9-இல் எழுத்துத் தேர்வு

சென்னை, டிச. 29: கட்டடக் கலை உதவியாளர், திட்ட உதவியா ளர் சார் நிலை, புள்ளியியல் சார் நிலை காலிப் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கட்டடக் கலை உதவியாளர், திட்ட உதவியாளர் சார் நிலை காலிப் பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பரிலும் ஒருங்கி ணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளுக்கு அக்டோபரிலும் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. இந்த பணியிடங்களுக் கான எழுத்துத் தேர்வு முறையே வருகிற ஜனவரி 8, 9 ஆகிய தேதி களில் நடைபெறவுள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் தேர் வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in, www.tnpscex ams.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண் ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் தெரிவித்தது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot