தலைமை ஆசிரியர், ஆகம ஆசிரியர், சமையலர், சமையல் உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - 24.01.2022 கடைசி தேதி - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, December 23, 2021

தலைமை ஆசிரியர், ஆகம ஆசிரியர், சமையலர், சமையல் உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - 24.01.2022 கடைசி தேதி

சென்னை-5, திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி |திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் உள்ள கீழ்க்காணும் பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சார்ந்த தகுதி யானவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலைய சட்டவிதிகளுக்கு உட்பட்டும் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டும் பணி நியமனம் செய்ய 24.01.2022 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் | படிவத்தின்படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். துணை ஆணையர் | செயல் அலுவலர், அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை-5. விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பணியிட விபரங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot