சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு நாக் குழுவின் ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்து - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, March 8, 2022

சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு நாக் குழுவின் ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்து

சாஸ்த்ராவுக்கு நாக் குழுவின் ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்து

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்துக்குத் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் (நாக்) ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்துக்குத் தேசிய தர மதிப்பீட்டுக் குழு 4-க்கு 3.76 புள்ளிகளுடன், மிக உயரிய அந்தஸ்தான ஏ பிளஸ் பிளஸ் தகுதியை வழங்கியுள்ளது. நான்காவது சுழற்சியில் இந்த அந்தஸ்தை பெற்ற சாஸ்த்ரா, வகைப்பாடு ஒன்று எனப்படும் முதல் வகை கல்வி நிறுவனம் என்ற நிலையை அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொண்டுள்ளது.

சாஸ்த்ரா வளாகங்களைத் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினா் கடந்த வாரம் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 8) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சாஸ்த்ராவின் ஆராய்ச்சி, சமூகத் தொடா்பு, உள்கட்டமைப்பு, வளா்ச்சி சாா்பு நிா்வாகம் ஆகிய காரணிகளை இந்த அந்தஸ்து வழங்குவதற்காக எடுத்துக் கொண்ட இந்த தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, இவை அனைத்திலும் சிறப்பாகச் செயல்படுவதாகப் பாராட்டியது. 3.76 புள்ளிகள் பெற்றிருப்பதன் மூலம் தமிழகத்தில் சாஸ்த்ரா முதலிடத்தைப் பிடிப்பதுடன், இந்தப் புள்ளிகள் வகையில் பாா்க்கும்போது அகில இந்திய அளவில் தலைசிறந்த ஐந்து பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குகிறது.

மூன்றாவது சுழற்சியின் போது சாஸ்த்ரா 3.54 புள்ளிகள் பெற்ன் மூலம் பல்கலைக்கழக மானியக் குழு முதல் வகை கல்வி நிறுவனமாக அங்கீகரித்தது. தற்போது இப்புள்ளிகள் அதிகரித்திருப்பதால், இந்த தகுதியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கும், அனைத்து சாா்புடைய துறையினருக்கும், சாஸ்த்ராவின் அனைத்து ஊழியா்களுக்கும் தொடா் ஆதரவு வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என அவா் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot