வரும் 22ம் தேதிக்குள் விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, March 20, 2022

வரும் 22ம் தேதிக்குள் விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் சேர 31 மாவட்டங்களில் மார்ச் 23ம் தேதி, புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 24ம் தேதி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மட்டும் 25ம் தேதி மாவட்ட அளவிலான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதையும் படிக்க | பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் திடீர் மயக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்யவேண்டும். www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்கான கடைசி நாள் மார்ச் 22ம் தேதி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot