நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, March 19, 2022

நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர் மாவட்டத் தில் படித்து வேலை வாய்ப்பின்றி காத்திருக் கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழி காட்டல் மையம் அரிய லூர் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற மார்ச் 20ம் தேதி அன்று அரியலூர் மாவட் டம், கீழப்பழூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 9மணி முதல் பிற்பகல் 3மணி வரை நடைபெற உள்ளது.முகாமில் அரிய லூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவ னங்கள் மேலும் திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்க ளில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவ னத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். அவ்வாறு தேர்வு செய் யப்பட்டு பணிநியமனம் பெறும் மனுதாரர்களது வேலை வாய்ப்பு பதிவு கள் ஏதும் இரத்து செய் யப்படமாட்டாது என்ற விவரம் தெரிவிக்கப்படு கிறது.

இதையும் படிக்க | பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்துக்கு..பெற்றோரே... வாங்க! வீடுவீடாக சென்று ஆசிரியர்கள் அழைப்பு

18 வயது முதல் 35வயது வரையிலான 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்ப டிப்பு வரை பயின்றவர் கள், பொறியியல். ஐடிஐ. டிப்ளமோ முடித்தவர்கள இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மேலும், இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சி யினை பெறுவது தொடர் பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும், அயல் நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) மூலம் ஆலோசனைகள் வழங் குவதற்கும்; வேலை வாய்ப்பு தொடர்பான உதவிகள் பெறுவதற்காக மாதிரி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டல் மையத்திற்கும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. எனவே இத்தனியார்துறை வேலைவாய்ப்புமுகாமில் மேற்கண்ட தகுதிகளை யுடைய வேலைநாடுநர் கள் www.tnprivatejobs. tn.gov.in http://www. tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது கல்வி விவரங் களை பதிவு செய்து பங் கேற்று பயனடையலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ் வதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot