பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, March 20, 2022

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் தங்களை முழுமையாக அா்ப்பணித்த தனிநபா், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது என்னும் பெயரில் 100 பேருக்கு விருதுடன் தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பு வழங்க உள்ளது.

இதையும் படிக்க | பாடப்புத்தகங்கள் சில்லறை விற்பனைக்கு அரசு அனுமதி
இந்த விருதுக்கு தகுதியான முன்மொழிவுகள் தேவையான ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்களுடன் ஆட்சியரிடம் சமா்ப்பிக்க மாா்ச் 31-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவம், வழிகாட்டுதல்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot