பள்ளி, கல்லூரிகளை திறந்தாலும் கவனம் மிக அவசியம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, March 4, 2022

பள்ளி, கல்லூரிகளை திறந்தாலும் கவனம் மிக அவசியம்

பள்ளி, கல்லூரிகளை திறந்தாலும் கவனம் மிக அவசியம்

“பள்ளிகள், கல்லுாரிகள், விடுதிகள் ஆகியவற்றை திறக்கலாம். அதேநேரத்தில், நாம் மிகுந்த கவனத்துடனும் இருக்க வேண்டியதும் அவசியம்,” என, 'நிடி ஆயோக்' உறுப்பினர் டாக்டர் பால் தெரிவித்துள்ளார். நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கிடையே, கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று நிடி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் பால் கூறியதாவது:

இதையும் படிக்க | புதிய கல்வி கொள்கை தேர்வுக்கு தனி சான்றிதழ்

மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால், கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இந்நிலையில், பள்ளிகள், கல்லுாரிகள், விடுதிகள் உள்ளிட்ட அனைத்தையும் திறப்பதில் எந்த தவறும் இல்லை. அதேநேரத்தில், நாம் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot