பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2022 - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, March 7, 2022

பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2022

பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!
 
திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.CUTNT/T/02/2022

மொத்த காலியிடங்கள்: 17

பணி: Professor, Assistant Professor, Associate Professor
துறைவாரியான காலியிடங்கள்:
1. Applied Psychology - 01
2. Chemistry - 01
3. Commerce - 02
4. Computer Science - 02
5. Economics - 01
6. English - 01
7. Geology - 01
8. History - 01
9. Law - 03
10. Management - 01
11. Statistics & Applied Maths - 01

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகளில் ஏதாவதொன்றில் முனைவர் பட்டம் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை:  www.cutn.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2022

மேலும் விவரங்கள் அறிய www.cutn.ac.in இணையதளத்தில் உள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot