தேசிய தொழில் சான்றிதழில் திருத்தம் செய்ய கால அவகாசம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, February 25, 2022

தேசிய தொழில் சான்றிதழில் திருத்தம் செய்ய கால அவகாசம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய தொழில் சான்றிதழில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கடந்த 2014 முதல் 2020ம் ஆண்டு வரை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய தொழில்பிரிவின் சான்றிதழ்களில் உள்ள பயிற்சியாளார் பெயர், தந்தையின் பெயர், தாயார் பெயர், புகைப்பட மாற்றம் மற்றும் தொழில்பிரிவின் பெயரில் உள்ள திருத்தம் ஆகியவற்றை சரி செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்க | நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

அவ்வாறு திருத்தம் செய்ய விரும்புபவர்கள், வரும் மார்ச் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எனவே பயிற்சி முடித்து, சான்றிதழில் திருத்தம் கோரும் பயிற்சியாளர்கள், தக்க ஆவணங்களுடன் துணை இயக்குநர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், செங்கற்பட்டு என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot