கிரைம் ரவுண்ட் அப்: ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, February 16, 2022

கிரைம் ரவுண்ட் அப்: ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது

வகுப்பில் மொபைல் போன் பயன்படுத்தியதை கண்டித்த ஆசிரியரை, மாணவன் கத்தியால் குத்திய சம்பவம், காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதுாரில் அரசு ஐ.டி.ஐ., உள்ளது. இங்கு, ஓவிய ஆசிரியராக ராஜா ஆனந்த், 48, என்பவர் பணியாற்றி வருகிறார். அதே பகுதி, அனுமந்தக்குடியை சேர்ந்த 18 வயது மாணவன், ஐ.டி.ஐ.,யில் மெஷினிஸ்ட் முதலாமாண்டு படித்து வருகிறார். மாணவன், வகுப்பில் மொபைல் போன் பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதை ராஜா ஆனந்த் சமீபத்தில் கண்டித்துள்ளார். இருப்பினும், மாணவன் கேட்காததால், பெற்றோரை அழைத்து வருமாறு ஆசிரியர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவன், சில நாட்களாக ஐ.டி.ஐ.,க்கு வரவில்லை. நேற்று வந்த மாணவன், ஆசிரியர் அறையில் இருந்த ராஜா ஆனந்தை, மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜா ஆனந்தை, சக ஆசிரியர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவனை பிடித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தியதை கண்டித்த ஆசிரியரை, மாணவன் கத்தியால் குத்திய சம்பவம், காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot