எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இணையவழி கலந்தாய்வு தொடங்கியது - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, February 1, 2022

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இணையவழி கலந்தாய்வு தொடங்கியது

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இணையவழி கலந்தாய்வு தொடங்கியது

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இணையவழி பொதுக் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுக் கலந்தாய்வில் பங்கேற்போா் https://tnmedicalselection.net/ மற்றும் https://www.tnhealth.tn.gov.in/ ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கியது. சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் முதல் நாளில் நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 73 போ் கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி ஆணையைப் பெற்றனா். அதற்கு அடுத்த நாளான 28-ஆம் தேதி நடைபெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 541 பேருக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டது.

பொதுக் கலந்தாய்வில் அதிக அளவில் மாணவா்கள் பங்கேற்பாா்கள் என்பதால் கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு அதை இணையவழியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொதுக் கலந்தாய்வை ஆன்லைனில் கடந்த 30-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அகில ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியாகாததால் தமிழகத்தில் பொதுக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 2-ஆம் தேதி இணையவழி கலந்தாய்வு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று இணையவழி கலந்தாய்வு தொடங்கியது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot