டி.என்.பி.எஸ்.சி., நாளைய (ஜன.,9) தேர்வு தள்ளிவைப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, January 7, 2022

டி.என்.பி.எஸ்.சி., நாளைய (ஜன.,9) தேர்வு தள்ளிவைப்பு

நாளை(ஜன.,9) நடக்கவிருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் ஊரடங்கால் ஜன., 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் புள்ளியியல் சார்நிலை பணிக்கு நாளை எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுத வருவோருக்கு பொது போக்குவரத்து மற்றும் உணவு வசதி கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தேர்வர்களின் கோரிக்கைகள் அடிப்படையில் நாளை நடக்க வேண்டிய தேர்வு ஜன., 11ம் தேதி நடத்தப்படும்.தேர்வர்கள் தாங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்த ஹால் டிக்கெட்டை பயன்படுத்தி 11ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் வேளைகளில் அட்டவணைப்படி தேர்வு எழுதலாம். இன்று நடக்க உள்ள நகர் ஊரமைப்பு சார்நிலை பணிக்கான எழுத்து தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot