அரசுப்பள்ளி கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி - இன்று முதல் 2 நாட்கள் நடக்கிறது - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, January 19, 2022

அரசுப்பள்ளி கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி - இன்று முதல் 2 நாட்கள் நடக்கிறது

மாநிலம் முழுவதும் உள்ள நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற் றும் மேல்நிலைப்பள் ளிகளில், 6 முதல் 12ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து கணித ஆசிரி யர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். இன் றும் (20ம் தேதி), நாளை யும் (21ம் தேதி) என இரு நாட்கள் பயிற்சி நடக்கிறது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசி ரியர்கள் அவர்களது பள்ளியிலேயே உள்ள ஹைடெக் ஆய்வகங்கள் மூலமும், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அருகில் உள்ள உயர்நி லைப்பள்ளி ஆய்வகங்கள் மூலமாகவும் பயிற்சியில் கலந்து கொள்கின்றனர். இதற்காக ஆய் வ கங்கள் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், எல்சிடி புரஜெக்டர் உள் ளிட்ட அனைத்து வசதிக ளையும் ஏற்படுத்தி தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிற்சியின் போது ஆசிரி யர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருப்பதுடன், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின் பற்றவேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற் சியில் சிறப்பாக நிறைவு செய்தவர்களுக்கு, குடிய ரசு தினத்தன்று அந்தந்த மாவட்ட கலெக்டர் மூல மாக சான்றிதழ் வழங்க ஏற் பாடுசெய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot